LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

வெயிலின் தாக்கம் அதிகமானதால் குற்றாலம் அருவிகள் வறண்டன- சிறிதுகூட தண்ணீர் இல்லை!

குற்றாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அருவிகள் அனைத்தும் வறண்டு காட்சி அளிக்கின்றன. 

குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலங்கள் ஆகும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழைக் காலம் என்பதால், சுமார் 6 மாதங்கள் குற்றாலத்தில் தொடர்ச்சியாக ஓரளவு தண்ணீர் விழும்.

இதனால் சீசன் காலம் மட்டும் இன்றி விடுமுறை நாட்களிலும் ஏராளமானோர் குடும்பத்துடன் குற்றாலம் வருகை தருகின்றனர். குறிப்பாக சனி, ஞாயிறுக்கிழமைகளில் ஓரளவு கூட்டம் காணப்படும். 

இந்த ஆண்டு ஜனவரி முடிந்து பிப்ரவரி துவங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக குற்றாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் தண்ணீரின்றி அருவிகள் வறண்டு காணப்படுகின்றன. புலியருவி அடியோடு வறண்டு விட்டது. பிரதான அருவியில் பாறையை ஒட்டினாற்போல் சிறிதளவு தண்ணீர் கசிகிறது. ஐந்தருவியில் இரண்டு பிரிவுகளில் சிறிதளவு தண்ணீர் கசிகிறது. பழைய குற்றாலத்திலும் தண்ணீர் வெகுவாக குறைந்தே காணப்படுகின்றது. 

கொளுத்தும் வெயில் மற்றும் தண்ணீர் இல்லாததால் குற்றாலம் வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது. ஆண்டில் பல மாதங்கள் வெறிச்சோடிய நிலையில், குற்றாலம் காணப்படுவதால் சீசன் இல்லாத நாட்களில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் சிறுவர் விளையாட்டு பூங்கா, வாட்டர் தீம் பார்க், எக்கோ டூரிசம், மலையேற்றம், இயற்கை மற்றும் மூலிகை மருத்துவம் ஆகியவற்றை ஊக்குவிக்க அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதன் மூலம் ஆண்டு முழுவதும் குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை தருவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

by Mani Bharathi   on 09 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர் சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர்
பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள் பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள்
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.