|
||||||||
இகர வருக்கம் |
||||||||
இரவி எனும்பெயர் எழுஞ்சூ ரியனுடன்
மலையும் வாணிகத் தொழிலும் வழங்குவர். ....194
இருளெனும் பெயரே கருமையு மயக்கமும்
நரகமுந் திமிரமு நவின்றனர் புலவர். ....195
இரலை யெனும்பெயர் மானி னேறும்
அசுபதியு மூதுங் கொம்பு மாமே. ....196
இறையெனும் பெயரே சிவனும் இல்லிறப்பும்
தலைமையுந் தலைவன் பெயருந் தங்கலும்
புள்ளிற குங்கை வரையும் சிறுமையும்
குடியிறைப் பெயரும் சொல்லும் கூறுவர். ....197
இடியெனும் பெயரே நென்மா முதலும்
உறுதி வார்த்தையும் அசனியும் ஓதுவர். ....198
இறாலெனும் பெயர்கார்த் திகையும் இடபமும்
தேன்கூ டுமொரு மீனுஞ் செப்புவர். ....199
இறும்பெனும் பெயரே தாமரைப் பூவும்
மலையும் காடும் வழங்கப் பெறுமே. ....200
இலஞ்சி யெனும்பெயர் மகிழமரப் பெயரும்
கொப்புளுந் தடாகமும் கூறுவர் புலவர். ....201
இடையெனும் பெயரெ இடமும் நுகப்பும்
நடுவும் எனவே நவிலப் பெறுமே. ....202
இகுளை யெனும்பெயர் சுற்றமும் பாங்கியும். ....203
இரதம் எனுபெயர் தேரும் இன்சுவையும்
அரைநாண் புணர்ச்சி பாத ரதமுமாம். ....204
இலம்பக மெனும்பெய ரத்தி யாயமும்
நுதலணிப் பெயருந் தொடையலு நுவலும். ....205
இந்தனம் எனும்பெயர் இசையும் காட்டமும்
நெருப்பிடு கலனு நிகழ்த்துவர் புலவர். ....206
இளியெனும் பெயரோ ரிசையும் யாழ்நரம்பும்
இகழ்ச்சியில் வருக்கப் பெயரும் இயம்புவர். ....207
இலையம் எனும்பெயர் கூத்தின் விகற்பமும்
கூத்தின் பெயருங் கேடுங் கூறுவர். ....208
இறைவை யெனும்பெயர் ஏணிநீர்ப் புட்டிலாம். ....209
இழுக்கம் எனும்பெயர் பிழைத்தல் பொல்லாங்குமாம். ....210
இறப்பெனும் பெயரே யிறத்தலும் மிகுதியும்
நடத்தலு மில்லி றப்பும் நவிலுவர். ....211
இலாங்கலி யெனும்பெயர் தென்ன மரமும்
கலப்பைப் பெயரும் வெண்காந்தளும் கருதுவர். ....212
இகுத்தல் எனும்பெயர் கொடுத்தலும் வீழ்த்தலும்
செகுத்தலு மவிர்தலும் இளைத்தலும் செப்புவர். ....213
இல்லெனும் பெயரே யில்லை யென்றலும்
இராசியு மனைவியு மனையும் இடமுமாம். ....214
இராசி யெனும்பெய ரோசையுங் கூட்டமும். ....215
இராசிய மெனும்பெயர் யோனியும் மறைவுமாம். ....216
இபமெனும் பெயரே மரத்தின் கொம்பும்
யானையின் பெயரும் இயம்புவர் புலவர். ....217
இகலெனும் பெயரே பெலமும் சமரமும்
பகையும் எனவே பகரப் பெறுமே. ....218
இடமெனும் பெயரிடப் புறமும் விசாலமும்
இடங்களின் விகற்பமும் செல்வமும் இயம்புவர். ....219
இடக்க ரெனும்பெயர் குடத்தின் பெயரும்
மறைத்திடு வார்த்தையும் வழங்கப் பெறுமே. ....220
இதழெனும் பெயர்பூ வினிதழு மதரமும்
பனைமடல் போலவும் பகரப் பெறுமே. ....221
இயமெனும் பெயரே யுரையும் ஓசையும்
வாத்தியப் பெயரும் வழங்கப் பெறுமே. ....222
இருபிறப் பெனும்பெய ரெயிறும் பறவையும்
பார்ப்பெனும் சாதியும் நிலவும் பகருவர். ....223
இருசெனும் பெயரே பண்டியுள் இரும்பும்
செவ்வையும் எனவே செப்புவர் புலவர். ....224
இவர்தல் எனும்பெயர் ஏறலும் விரும்பலும். ....225
இவறல் எனும்பெயர் ஓசையு மறப்புமாம். ....226
இழுமென லெனும்பெயர் இனிமையும் ஒலியுமாம். ....227
இறத்தல் எனும்பெயர் மிகுத்தலும் கடத்தலும்
மரணமும் எனவே வழங்கப் பெறுமே. ....228
இறுத்த லெனும்பெயர் தங்கலும் இயம்பலும்
ஒடித்தலும் எனவே யுரைத்தனர் புலவர். ....229
இளமை யெனும்பெயர் தண்மையும் காமமும்
இளமையின் பருவமு மியம்பப் பெறுமே. ....230
இரதி யெனும்பெயர் மதனன் றேவியும்
பித்தளைப் பெயரும் பிடியா னையுமாம். ....231
இக்கெனும் பெயரே மதுவும் கரும்புமாம். ....232
இறும்பூ தெனும்பெயர் மலையும் அதிசயமும்
சிறுதூறும் குழையுந் தகைமையும் செப்புவர். ....233
இடங்க ரெனும்பெயர் குடமும் தூர்த்தரும்
முதலையு மெனவே மொழிந்தனர் புலவர். ....234
இரவி எனும்பெயர் எழுஞ்சூ ரியனுடன் மலையும் வாணிகத் தொழிலும் வழங்குவர். ....194
இருளெனும் பெயரே கருமையு மயக்கமும் நரகமுந் திமிரமு நவின்றனர் புலவர். ....195
இரலை யெனும்பெயர் மானி னேறும் அசுபதியு மூதுங் கொம்பு மாமே. ....196
இறையெனும் பெயரே சிவனும் இல்லிறப்பும் தலைமையுந் தலைவன் பெயருந் தங்கலும் புள்ளிற குங்கை வரையும் சிறுமையும் குடியிறைப் பெயரும் சொல்லும் கூறுவர். ....197
இடியெனும் பெயரே நென்மா முதலும் உறுதி வார்த்தையும் அசனியும் ஓதுவர். ....198
இறாலெனும் பெயர்கார்த் திகையும் இடபமும் தேன்கூ டுமொரு மீனுஞ் செப்புவர். ....199
இறும்பெனும் பெயரே தாமரைப் பூவும் மலையும் காடும் வழங்கப் பெறுமே. ....200
இலஞ்சி யெனும்பெயர் மகிழமரப் பெயரும் கொப்புளுந் தடாகமும் கூறுவர் புலவர். ....201
இடையெனும் பெயரெ இடமும் நுகப்பும் நடுவும் எனவே நவிலப் பெறுமே. ....202
இகுளை யெனும்பெயர் சுற்றமும் பாங்கியும். ....203
இரதம் எனுபெயர் தேரும் இன்சுவையும் அரைநாண் புணர்ச்சி பாத ரதமுமாம். ....204
இலம்பக மெனும்பெய ரத்தி யாயமும் நுதலணிப் பெயருந் தொடையலு நுவலும். ....205
இந்தனம் எனும்பெயர் இசையும் காட்டமும் நெருப்பிடு கலனு நிகழ்த்துவர் புலவர். ....206
இளியெனும் பெயரோ ரிசையும் யாழ்நரம்பும் இகழ்ச்சியில் வருக்கப் பெயரும் இயம்புவர். ....207
இலையம் எனும்பெயர் கூத்தின் விகற்பமும் கூத்தின் பெயருங் கேடுங் கூறுவர். ....208
இறைவை யெனும்பெயர் ஏணிநீர்ப் புட்டிலாம். ....209
இழுக்கம் எனும்பெயர் பிழைத்தல் பொல்லாங்குமாம். ....210
இறப்பெனும் பெயரே யிறத்தலும் மிகுதியும் நடத்தலு மில்லி றப்பும் நவிலுவர். ....211
இலாங்கலி யெனும்பெயர் தென்ன மரமும் கலப்பைப் பெயரும் வெண்காந்தளும் கருதுவர். ....212
இகுத்தல் எனும்பெயர் கொடுத்தலும் வீழ்த்தலும் செகுத்தலு மவிர்தலும் இளைத்தலும் செப்புவர். ....213
இல்லெனும் பெயரே யில்லை யென்றலும் இராசியு மனைவியு மனையும் இடமுமாம். ....214
இராசி யெனும்பெய ரோசையுங் கூட்டமும். ....215
இராசிய மெனும்பெயர் யோனியும் மறைவுமாம். ....216
இபமெனும் பெயரே மரத்தின் கொம்பும் யானையின் பெயரும் இயம்புவர் புலவர். ....217
இகலெனும் பெயரே பெலமும் சமரமும் பகையும் எனவே பகரப் பெறுமே. ....218
இடமெனும் பெயரிடப் புறமும் விசாலமும் இடங்களின் விகற்பமும் செல்வமும் இயம்புவர். ....219
இடக்க ரெனும்பெயர் குடத்தின் பெயரும் மறைத்திடு வார்த்தையும் வழங்கப் பெறுமே. ....220
இதழெனும் பெயர்பூ வினிதழு மதரமும் பனைமடல் போலவும் பகரப் பெறுமே. ....221
இயமெனும் பெயரே யுரையும் ஓசையும் வாத்தியப் பெயரும் வழங்கப் பெறுமே. ....222
இருபிறப் பெனும்பெய ரெயிறும் பறவையும் பார்ப்பெனும் சாதியும் நிலவும் பகருவர். ....223
இருசெனும் பெயரே பண்டியுள் இரும்பும் செவ்வையும் எனவே செப்புவர் புலவர். ....224
இவர்தல் எனும்பெயர் ஏறலும் விரும்பலும். ....225
இவறல் எனும்பெயர் ஓசையு மறப்புமாம். ....226
இழுமென லெனும்பெயர் இனிமையும் ஒலியுமாம். ....227
இறத்தல் எனும்பெயர் மிகுத்தலும் கடத்தலும் மரணமும் எனவே வழங்கப் பெறுமே. ....228
இறுத்த லெனும்பெயர் தங்கலும் இயம்பலும் ஒடித்தலும் எனவே யுரைத்தனர் புலவர். ....229
இளமை யெனும்பெயர் தண்மையும் காமமும் இளமையின் பருவமு மியம்பப் பெறுமே. ....230
இரதி யெனும்பெயர் மதனன் றேவியும் பித்தளைப் பெயரும் பிடியா னையுமாம். ....231
இக்கெனும் பெயரே மதுவும் கரும்புமாம். ....232
இறும்பூ தெனும்பெயர் மலையும் அதிசயமும் சிறுதூறும் குழையுந் தகைமையும் செப்புவர். ....233
இடங்க ரெனும்பெயர் குடமும் தூர்த்தரும் முதலையு மெனவே மொழிந்தனர் புலவர். ....234
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|