LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF

எல்லிசன் போற்றிய திருக்குறள் - கி.ஸ்ரீதரன்

தமிழ்ப் பொதுமறையாம் திருக்குறளை அயல் நாட்டவரும் போற்றியுள்ளனர். சென்னை மாவட்ட ஆட்சியராக (1810-19-இல்) பணியாற்றிய ஆங்கிலேய அதிகாரி ஃபிரான்சிஸ் வைட் எல்லிஸ் 1796-ஆம் ஆண்டு ஆட்சிப்பணியில் சேர்ந்து தமிழ்-வடமொழி இரண்டிலும் தேர்ச்சிபெற்று விளங்கினார். திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் மிகுந்த பற்று கொண்டு விளங்கினார். திருக்குறளிலிருந்து பல குறள்களைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உரையுடன் ஓர் அரிய நூலை எழுதினார்.


1819-இல் சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது சென்னை நகரில் 27 இடங்களில் குடிநீர் கிணறுகளை அமைக்க ஏற்பாடு செய்தார். அத்தகைய கிணறுகளுள் ஒன்றான இராயப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயிலின் கிணற்றில் பதித்து வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு ஒன்றை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன் தமது ஆய்வின்போது கண்டறிந்தார். அக்கல்வெட்டில்,

""புலவர்கள் பெருமான் மயிலையம்பதியான்
தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்
திருக்குறடன்னிற் றிருவுளம் பற்றிய
.......    ............  ...........
"இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணு நாட்டிற் குறுப்பு'
என்பதின் பொருளை யென்னுளாய்ந்து''

என்று உரிய திருக்குறளை (737) மேற்கோளாகக் குறிப்பிட்டிருப்பது சிறப்பானதாகும். மேலும், திண்டுக்கல்லில் உள்ள எல்லிசுதுரையின் கல்லறை மீது உள்ள கல்வெட்டிலும் அவருடைய தமிழ்ப்பணி கீழ்க்காணுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

""திருவள்ளுவப் பெயர்த் தெய்வஞ்செப்பி
யருள் குறணூறு ளறப்பாலினுக்குத்
தங்கு பலநூறு தாரண கடலைப் பெய்
திங்கிலீசு தனிலிணங்க மொழிபெயர்த்தோன்''

என்று குறிப்பிட்டுச் சொல்வதால், திருக்குறள் மீது அவர் கொண்டிருந்த ஈடுபாட்டை நம்மால் அறியமுடிகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இராயப்பேட்டை கல்வெட்டு, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை வரலாற்றுக் காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் அனைவரும் கண்டு மகிழ வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க காட்சிப் பொருளாக அக்கல்வெட்டு விளங்குகிறது.


""இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணு நாட்டிற் குறுப்பு'' என்று திருக்குறள் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ள கல்வெட்டு.

by Swathi   on 10 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து
அமெரிக்காவின் சென்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T. R. B.ராஜாவிற்கு திருக்குறள் ஆங்கில நூல்  பரிசளிக்கப்பட்டது. அமெரிக்காவின் சென்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T. R. B.ராஜாவிற்கு திருக்குறள் ஆங்கில நூல் பரிசளிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபை நூலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு திருக்குறள் நூல்கள் ஐக்கிய நாடுகள் சபை நூலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு திருக்குறள் நூல்கள்
அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது. அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது.
திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள் திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள்
மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.