|
||||||||
ஏகார வருக்கம் |
||||||||
ஏல்வை யெனும்பெயர் வாவியும் பொழுதுமாம். ....305
ஏமம் எனும்பெயர் இன்பமும் வெண்ணீறுஞ்
சேமமும் பொன்னுமே மாப்பு மயக்கும்
காவலும் இரவுங் கருதுவர் புலவர். ....306
ஏறெனும் பெயரிடி யேற்றின் பெயரும்
விலங்கி னாண்பாற் பெயரு மிடபமும்
அசுபதிப் பெயரு மாகு மென்ப. ....307
ஏனல் எனும்பெயர் தினைதினைப் புனமுமாம். ....308
ஏனாதி யெனும்பெயர் மயிர்வினை யோனும்
மந்திரித் தந்திரிப் பெயரும் வழங்குக. ....309
ஏந்த லெனும்பெயர் பெருமையு முயரமும்
தலைவனும் எனவே சாற்றினர் புலவர். ....310
ஏதி யெனும்பெயர் ஆயுதப் பொதுவும்
வாளும் எனவே வகுத்தனர் புலவர். ....311
ஏதம் எனும்பெயர் குற்றமும் துன்பமும். ....312
ஏணி யெனும்பெயர் எல்லையு முலகமு
மானுங் கண்ணே ணியுமே வழங்குவர். ....313
ஏங்கல் எனும்பெயர் ஒலியும் இரங்கலும்
ஏங்குதற் பெயரும் இயம்புவர் புலவர். ....314
ஏற்றல் எனும்பெயர் எதிர்ந்துபோர் செய்தலும்
கோடலின் பெயருங் கூறுவர் புலவர். ....315
ஏரெனும் பெயரே யழகுமுழு பெற்றமும்
உழவுடை யோனும் உரைக்கப் பெறுமே. ....316
ஏனையெனும் பெயரிடைச் சொல்லும் ஒலியுமாம். ....317
ஏவலெனும் பெயர் வியங்கோளும் வறுமையும். ....318
ஏல மெனும்பெய ரேலவி கற்பமும்
மயிர்ச்சாந் துமென வழங்குவர் புலவர். ....319
ஏல்வை யெனும்பெயர் வாவியும் பொழுதுமாம். ....305
ஏமம் எனும்பெயர் இன்பமும் வெண்ணீறுஞ் சேமமும் பொன்னுமே மாப்பு மயக்கும் காவலும் இரவுங் கருதுவர் புலவர். ....306
ஏறெனும் பெயரிடி யேற்றின் பெயரும் விலங்கி னாண்பாற் பெயரு மிடபமும் அசுபதிப் பெயரு மாகு மென்ப. ....307
ஏனல் எனும்பெயர் தினைதினைப் புனமுமாம். ....308
ஏனாதி யெனும்பெயர் மயிர்வினை யோனும் மந்திரித் தந்திரிப் பெயரும் வழங்குக. ....309
ஏந்த லெனும்பெயர் பெருமையு முயரமும் தலைவனும் எனவே சாற்றினர் புலவர். ....310
ஏதி யெனும்பெயர் ஆயுதப் பொதுவும் வாளும் எனவே வகுத்தனர் புலவர். ....311
ஏதம் எனும்பெயர் குற்றமும் துன்பமும். ....312
ஏணி யெனும்பெயர் எல்லையு முலகமு மானுங் கண்ணே ணியுமே வழங்குவர். ....313
ஏங்கல் எனும்பெயர் ஒலியும் இரங்கலும் ஏங்குதற் பெயரும் இயம்புவர் புலவர். ....314
ஏற்றல் எனும்பெயர் எதிர்ந்துபோர் செய்தலும் கோடலின் பெயருங் கூறுவர் புலவர். ....315
ஏரெனும் பெயரே யழகுமுழு பெற்றமும் உழவுடை யோனும் உரைக்கப் பெறுமே. ....316
ஏனையெனும் பெயரிடைச் சொல்லும் ஒலியுமாம். ....317
ஏவலெனும் பெயர் வியங்கோளும் வறுமையும். ....318
ஏல மெனும்பெய ரேலவி கற்பமும் மயிர்ச்சாந் துமென வழங்குவர் புலவர். ....319 |
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|