|
|||||
பள்ளிக்கல்விக்கு ரூ. 28,757 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது- தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு! |
|||||
2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ரூ.28,757 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. சட்டப்பேரவையில் நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது, அமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார். தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு: விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும். தமிழகத்தில் தனிநபர் வருமானம் ரூ.1,42,267 ஆக உயர்த்தப்படும். மக்கள் பங்களிப்புடன் ஏரிகளை புனரமைக்க ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்படும். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. புதுமை வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் வரி வருவாய் 14 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.14,315 கோடி இருக்கும். நகராட்சித்துறை, குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.18,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 2018-19-ல் தமிழக அரசு வாங்கிய கடன் ரூ.44,066.82 கோடி ஆகும்.தமிழக அரசின் கடன் ரூ.3 லட்சத்து 97 ஆயிரத்து 495 கோடியாக உயர்கிறது. 2019-20-ல் தமிழக அரசு ரூ.43,000 கோடி கடன் வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டை விட தமிழக அரசின் கடன் இந்த ஆண்டு 42 ஆயிரம் கோடி அதிகம் ஆகும். சென்னையில் ஆற்றோரம் வசிப்போருக்கு 38,000 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. உலக வங்கி உதவியுடன் 4,647 கோடி ரூபாயில் வீடுகள் கட்டப்படும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கடன் ரூ.22,815 கோடி ஆகும். அரசின் நிதி பற்றாக்குறை 3 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி கட்டப்படும். பள்ளி கல்வித்துறைக்கு ரூ.28,757 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கஜா புயல் நிவாரணமாக ரூ.2,361.41 கோடி வழங்கப்பட்டு் உள்ளது. ஜெர்மன் வங்கி உதவியுடன் 2,000 பேட்டரி பேருந்துகள் வாங்கி இயக்கப்படும். சென்னை, கோயம்புத்தூர், மதுரையில் முதல்கட்டமாக 500 பேருந்துகள் இயக்கப்படும். சென்னை மெட்ரோ ரயில் மாதவரம் - கோயம்பேடு - சோழிங்கநல்லூர் திட்டத்திற்கு ஜப்பான் நிதியுதவி பெறப்படுகிறது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தை தலைமையாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் அமைக்கப்படுகிறது. கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் விரைவில் உருவக்கப்படும். ரூ.2,000 கோடியில் சென்னையில் வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும். அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு ரூ.1000 ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ரூ.1,125 கோடியில் தேனி, சேலம், ஈரோட்டில் 250 மெகாவாட் மிதக்கும் சூரிய திட்டம் உருவாகிறது. ரூ.2,350 கோடியில் 500 மெகாவாட் கடலாடி, மிக உய்ய சூரிய பூங்கா திட்டம் அமைகிறது. முதியோர் உதவித்தொகை, இலவச வேட்டி, வேலை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.3,958 கோடி ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டு உள்ளது. ரூ.284 கோடி மதிப்பில் வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் ஸ்ரீபெரும்புதூர் ஒரத்தூரில் அடையாறு உபநதியில் நீர்த்தேக்கம் அமைக்கப்படும். குறிஞ்சிப்பாடி வட்டத்தில் பரவனாற்று படுகை மறு சீரமைக்கப்படும். சிதம்பரம் வட்டம் பேரம்பட்டு அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளத்தடுப்பு நீரொழுங்கி கட்டப்படும். பிச்சாவரம் அருகே உப்பனாற்றின் குறுக்கே நீரொழுங்கி அமைக்கப்படும். நில ஆதாரங்களை முறையாக திறம்பட பயன்படுத்த மாநில நலப்பயன்பாட்டு கொள்கை வடிவமைக்கப்படும். ஒன்றரை லட்சம் குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும். தேசிய ஊராக வாழ்வாதார திட்டத்துக்கு ரூ.349.4 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறைக்கு ரூ.6,265.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஊரக குறுந்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.172 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு மொத்தம் ரூ.1,031.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 2019-20-ம் ஆண்டில் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.1,142 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் 7,896-ல் இருந்து 5,198 ஆக குறைக்கப்படுகிறது. 2019-20-ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு 2,000 சூரிய பம்ப் செட்டுகள் வழங்கப்படும். ரயில்வே மேம்பாலப் பணிகளுக்கு வரும் ஆண்டில் ரூ.726.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 2019-20-ம் ஆண்டுகளுக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறைக்கு ரூ.13,605 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பள்ளி கல்வித்துறைக்கு 2019-20-ம் ஆண்டில் ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தொடக்கநிலை வகுப்புகளில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 99.8 ஆக உயர்கிறது. பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது. இலவச பாடப்புத்தகங்கள், காலணிகள், புத்தகப் பைகள் வழங்க ரூ.1,657 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்திற்கு ரூ.2,791 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முதல் முதல்முறையாக பட்டதாரி மாணவ, மாணவியருக்கு கல்வி கட்டணம் வழங்க ரூ.460 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 9,975 பேர் பணியில் அமர்த்தப்படுவார்கள். வேளாண்துறைக்கு ரூ.10,550 கோடி நிதி ஒதுக்கப்படும் என்பன உள்பட பல அம்சங்கள் இடம்பெற்று உள்ளன. |
|||||
by Mani Bharathi on 08 Feb 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|