சகாப்தம் படத்தின் மூலம் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் கேச்சா தமிழில் மீண்டும் அறிமுகமாகிறார்.
எத்தனையோ இந்தி, தெலுங்கு மொழி இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் இந்திய சினிமாவில் நடிக்க அழைத்தும், நடிக்க முன் வராத கேச்சா தன்னை இந்திய சினிமாவில் முதன் முறையாக விருதகிரி படம் மூலம் அறிமுகப்படுத்திய விஜயகாந்த் அவர்களுக்காக இதில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
இவர் சகாப்தம் படத்தின் நாயகன் சன்முகபாண்டியனோடு மோதும் சண்டை காட்சி சமீபத்தில் பேங்காக்கில் படமாக்கப்பட்டது பேங்காக்கில் அண்டர்கிரவுண்ட் கார் சேஸிங் மற்றும் பல அடுக்கு மாடிகள் கொண்ட பகுதிகளில் சேஸிங் காட்சிகள் படம் எடுக்கப்பட்டது இக்காட்சியில் நாயகன் சண்முகபாண்டியன் 150 மாடி கட்டிடத்தில் இருந்து குதிக்கும் காட்சியில் டூப்பு இல்லாமல் நடித்ததாக கூறப்படுகிறது.
இதை கண்ட கேச்சாவும் படக்குழுவினரும் அவரை மிகவும் பாராட்டினார்கள். இச்சண்டை காட்சிகள் பெரும்பாலும் ஹெலிகாப்டர் மூலம் ஆறு நாட்கள் சுமார் அறுபது லட்சம் பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளதாம். .
|