|
|||||
எண்ணெய் குளியல் - சிறப்பு பார்வை !! |
|||||
எண்ணெய் குளியல் பற்றி அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் அதனை யாரும் சரிவர கடைபிடிப்பதில்லை. அதற்க்கு தற்போது உள்ள இளைய தலைமுறையினரே சாட்சி. ஆனால் அந்தக் காலத்தில் பார்க்கும் பெண்கள் எல்லாம் பளிச்சென இருப்பார்கள். இதற்க்கு காரணம் தினமும் தலைக் குளியல், வாரம் தவறாமல் எண்ணெய்க் குளியல். இதுவே அந்தக்காலத்து பெண்கள் அழகின் ராகிசியமாகும். ஆனால் இப்போதோ, எங்கு பார்த்தாலும், எண்ணெய் இல்லாத தலைதான் தெரிகிறது. தலைவலி வரும், ஜலதோஷம் பிடிக்கும், முகத்தில் எண்ணெய் வடியும், தலைமுடியை அலசுவதே கஷ்டம் என்று எண்ணெய்க் குளியலைத் தவிர்த்துவிடுகின்றனர் இன்றைய இளைய தலைமுறையினர்.
எண்ணெய் குளியில் மூலம் வேர்க்குரு, தேமல், படை, சிரங்கு, பொடுகுத் தொல்லை போன்ற சருமப் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். இப்போது எல்லாருக்கும் எப்படி எண்ணெய் குளியில் குளிக்க வேண்டும் என்று கேள்வி இருக்கும். சரி வாருங்கள் அது பற்றி பார்க்கலாம். எண்ணெய் குளியில் குளிப்பவர்கள் ஓரளவு வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். அடிக்கும் வெயிலுக்கு, உஷ்ண தேகம் உள்ளவர்கள் ஒரு நாள் விட்டு ஒருநாள்கூட எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது. விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் என மூன்று எண்ணெய்களையும் சமமாகக் கலந்து உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்து ஊறவிட வேண்டும். சீயக்காயுடன் பாசிப்பருப்பு சேர்த்து அரைத்த நலங்கு மாவைத் தேய்த்து அலசினால் உடல் குளுமையாகும்.
நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் 'சந்தனாதித் தைலம்’ வாங்கியும் தேய்த்துக் குளிக்கலாம். வாதம், மூட்டு வலி பிரச்னை இருப்பவர்கள், ஆயில் மசாஜ் செய்து குளிப்பது நல்லது. சைனஸ், சளித் தொல்லை இருப்பவர்கள், கடைகளில் 'சுக்கு தைலம்’ வாங்கித் தேய்த்துக் குளிக்கலாம். வேர்க்குரு இருந்தால் 'அருகம்புல் தைலம்’, 'வெட்டிவேர் தைலம்’ தடவிக் குளிக்கலாம். குளித்து முடித்து வந்ததும், தலையை நன்றாக ஈரம் போகத் துடைக்கவேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று வெளியில் அதிகம் அலையக் கூடாது. உடலின் வெளிப்புறம் உஷ்ணம் இருப்பதால், மேலும் சூடு சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும். அதிகக் குளிர்ச்சியான ஐஸ்க்ரீம், ஃப்ரிட்ஜில் இருக்கும் ஜூஸ் வகைகளைச் சாப்பிடக் கூடாது. சட்டென சளி பிடிக்கலாம். உடலை எப்போதும், சீரான வெப்பநிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். அப்படி இருந்தாலே எந்த நோயும் நெருங்காது. எண்ணெய் குளியல் - சிறப்பு பார்வை
எண்ணெய் குளியல் பற்றி அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் அதனை யாரும் சரிவர கடைபிடிப்பதில்லை. அதற்க்கு தற்போது உள்ள இளைய தலைமுறையினரே சாட்சி. ஆனால் அந்தக் காலத்தில் பார்க்கும் பெண்கள் எல்லாம் பளிச்சென இருப்பார்கள். இதற்க்கு காரணம் தினமும் தலைக் குளியல், வாரம் தவறாமல் எண்ணெய்க் குளியல். இதுவே அந்தக்காலத்து பெண்கள் அழகின் ராகிசியமாகும். ஆனால் இப்போதோ, எங்கு பார்த்தாலும், எண்ணெய் இல்லாத தலைதான் தெரிகிறது. தலைவலி வரும், ஜலதோஷம் பிடிக்கும், முகத்தில் எண்ணெய் வடியும், தலைமுடியை அலசுவதே கஷ்டம் என்று எண்ணெய்க் குளியலைத் தவிர்த்துவிடுகின்றனர் இன்றைய இளைய தலைமுறையினர்.
வாருங்கள் உடலுக்கும் மனதுக்கு ஆரோக்கியம் தரும் எண்ணெய் குளியலின் அவசியத்தை பார்ப்போம்.
நமது சர்மம் சுற்றுச்சூழல் மாசு காரணமாக அடிக்கடி பாதிப்படைகிறது, வெளியிலில் இருந்து வந்து குவியும் தூசு தோலின் மீது படிந்துவிடும். இந்தத் தூசு எல்லாமே, தண்ணீரில் கரைவது இல்லை. சோப்பு போட்டுக் குளிப்பது வெளிப்புற அழுக்கைப் போக்குமே தவிர, சருமத்தின் உள் ஊடுருவிய அழுக்கு, தூசியைப் போக்காது. இதனால் சர்ம நோய்கள் ஏற்ப்படும். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம், சருமத்தைப் பொலிவுடன் வைத்திருந்தனர் நம் முன்னோர்கள்.
எனவே, எண்ணெய் தேய்த்து குளிப்பது மிகவும் நல்லது. சருமத்தில் எண்ணெய்ப் பசை இருந்தால்தான் சூரியனிலிருந்து வரும் வைட்டமின் டி சத்தை உடல் கிரகிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதிலும், எண்ணெயை உடல் முழுவதும் தடவி மசாஜ் செய்யும்போது நிணநீர் சுரப்பிகள் சுறுசுறுப்பாகச் செயல்படும். மன அழுத்தம் குறையும். நீர்க்கடுப்பைப் போக்கும். உடலினுள் இருக்கும் உஷ்ணமானது வெளியேறிவிடும். அதனால்தான், எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று, உடல் சூடாகவே இருக்கும். இதை, 'உடல் சூட்டைக் கிளப்பிவிட்டுட்டுச்சு...’ என்று பலரும் எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல் இருந்துவிடுவார்கள். உடலின் உள் உறுப்புகள் குளிர்ச்சியாக இருக்கும் என்பதுதான் நிதர்சன உண்மை.
எண்ணெய் குளியில் மூலம் வேர்க்குரு, தேமல், படை, சிரங்கு, பொடுகுத் தொல்லை போன்ற சருமப் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
இப்போது எல்லாருக்கும் எப்படி எண்ணெய் குளியில் குளிக்க வேண்டும் என்று கேள்வி இருக்கும். சரி வாருங்கள் அது பற்றி பார்க்கலாம். எண்ணெய் குளியில் குளிப்பவர்கள் ஓரளவு வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். அடிக்கும் வெயிலுக்கு, உஷ்ண தேகம் உள்ளவர்கள் ஒரு நாள் விட்டு ஒருநாள்கூட எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது. விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் என மூன்று எண்ணெய்களையும் சமமாகக் கலந்து உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்து ஊறவிட வேண்டும். சீயக்காயுடன் பாசிப்பருப்பு சேர்த்து அரைத்த நலங்கு மாவைத் தேய்த்து அலசினால் உடல் குளுமையாகும். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் 'சந்தனாதித் தைலம்’ வாங்கியும் தேய்த்துக் குளிக்கலாம். வாதம், மூட்டு வலி பிரச்னை இருப்பவர்கள், ஆயில் மசாஜ் செய்து குளிப்பது நல்லது. சைனஸ், சளித் தொல்லை இருப்பவர்கள், கடைகளில் 'சுக்கு தைலம்’ வாங்கித் தேய்த்துக் குளிக்கலாம். வேர்க்குரு இருந்தால் 'அருகம்புல் தைலம்’, 'வெட்டிவேர் தைலம்’ தடவிக் குளிக்கலாம். குளித்து முடித்து வந்ததும், தலையை நன்றாக ஈரம் போகத் துடைக்கவேண்டும்.
எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று வெளியில் அதிகம் அலையக் கூடாது. உடலின் வெளிப்புறம் உஷ்ணம் இருப்பதால், மேலும் சூடு சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும்.
அதிகக் குளிர்ச்சியான ஐஸ்க்ரீம், ஃப்ரிட்ஜில் இருக்கும் ஜூஸ் வகைகளைச் சாப்பிடக் கூடாது. சட்டென சளி பிடிக்கலாம். உடலை எப்போதும், சீரான வெப்பநிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். அப்படி இருந்தாலே எந்த நோயும் நெருங்காது.
காய்ச்சலுடன் இருக்கும் கர்ப்பிணிகள், நோய்வாய்ப்பட்டவர்கள், அடிபட்டு உள் காயம்பட்டவர்கள், மாதவிடாய் பிரச்னை உள்ளவர்கள், நாள்பட்ட நோயாளிகள், புற்றுநோயாளிகள், உடலில் அதீத வலி இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்றே எண்ணெய்க் குளியலை மேற்கொள்ளலாம். மசாஜ் செய்யவே கூடாது.
|
|||||
by Swathi on 23 Jun 2014 1 Comments | |||||
Tags: Oil Bath method Ennai Kuliyal Seimurai எண்ணெய் குளியல் | |||||
Disclaimer: |
|||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|